Friday, 7 November 2014

ஸ்ரீ மாருதி கவசம்

சரணாகதி

உதய சூரியனுக்குச் சமம் ஆனவரும்

உதாரமான புஜ  பலம் உள்ளவரும்

கோடி மன்மதனுக்குச்  சமமான லாவ------- யம் உள்ளவரும்

வித்தைகள் எல்லாவற்றிலும்  சிறந்தவரும்

ஸ்ரீ இராமனுடைய ஹ்ருதயத்திற்கு ஆனந்தம் அளிப்பவரும்

பக்த்தர்களுக்கு கற்பக விருட்சம் போல வேண்டியதை கொடுப்பவரும்

அபய, வரத ஹஸ் தமுள்ளவரும்

ஆகிய ஸ்ரீ மாருதாத்மஜரை ஆஸ்ரயிக்கின்றேன்

சமுத்திரத்தை விளையாட்டாகத் தாண்தினவரும்

ஜனக மஹாராஜனின் திருக்குமாரத்தி யான ஸிதா தேவியுடைய  தூக்கம் என்கின்ற  ​ ருப்பை எடுத்து

அதை கொண்டே இலங்கை நகரத்தை  பொசிக்கினவரும்

ஆன அஞ்சனா நந்தனரை நான் வணங்கிப் பாதம் பணிகின்றேன்.

தியானம் 
பால  சூரியனுடைய நீதிக்கு ஒப்பானவரும் 

தேவர் களுடைய எதிரிகளின் கொழுப்பை அடக்குகின்றவரும் 

தேவேந்திரனுக்கும் முதன்மையாக இருப்பவரும் 
மிகப் பெரும் புகழ் பெற்றிருப்பவரும்   

தன்னுடைய தேகத்தின் ஒளியினால் திக்குகள் எங்கும் பிரகாசிப்பவரும் 
சுக்க்ரிவன் முதலான எண்ணிறந்த வானரர்களின் கூட்டத்தினரோடு சேர்ந்திருப்பவரும் 

வியக்தமான தத்துவ ஞாலத்தில் நிரம்ப ஆசையை  உடையவரும் 

செக்கச் செவேல் என்று உதய சூரியனைப் போன்ற சிவந்த கண்கள் உடையவரும் 

பட்டுப் பீதாம்பரம் அணிந்தவரும் ,வாயு பகவானின் திருக்குமாரரும்

கோடி சூரியனுக்கு ஒப்பான பிரகாசிக்கும் உடல் கட்டைப் பெற்றவரும்

அழகான வீராசனத்தில் அமர்ந்திருப்பவரும்

மௌஞ்சி ,யக்ஞோப வீதம் ,ஆபரணம் , ஆகியவற்றைத் தரித்துப்

பிரகாசிப்பவரும்,தெய்வீக களையைப்  பெற்றவரும் ,

குண்டலங்களை அடையாளமாக உடையவரும் ,

பக்தர்களுடைய கோ ரிக்கைகளை ஏற்று ,

அவர்களுக்கு விரும்பினதை தர வல்லமை உடையவராக இருப்பவரும்

முனிவர்களாலும் வணங்கத் தக்க பெருமை பெற்றவரும்

வேத த்வனிகளின்  சப்தத்தினால் பெரும் மகிழ்ச்சி உடையவரும்

வானர குலத்திற்குத் தலைவராக விலங்குபவரும்

நீண்ட நெடிய சமுத்திரத்தினைப் பசுவின் குளம்படி போலக்  கலக்கி

அட்டகாசம் செய்தவருமான,ஸ்ரீ மாருதியைத் தியானிக்கிறேன்

நமஸ்காரம் 
வைரம் பாய்ந்த அங்கங்களை உடைய வரும் 

பிங்கள வர்ணமுள்ள உரோமங்களைப் பெற்றிருப்பவரும் 

தங்கத்தினால் செய்யப்பட்ட குண்டலங்களை அணிந்திருப்பவரும்

சமுத்திரத்தினை தனது வலிமையினால் கடந்தவரும்

இரண்டு  கைகளைப் பெற்றவரும்,எந்நேரமும் கூப்பிய திருக்கைகளுடன்

ஸ்ரீ இராமச் சந்திர மூர்த்தியை நினைத்து கொண்டு கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய இருப்பவரும்

இரு குண்டலங்களினால் பிரகாசிக்கும் முகத் தாமரையினை மேலும்
திவ்ய மயமாய் விளங்கச் செய்பவரும்

வானரங்களில் உத்தமருமான ஸ்ரீ மாருதியை வணங்குகின்றேன்

வலது கையிலே பிரகாசிக்கக்  கூடிய கதாயுததினைத் தரித்தவரும்

இடது கையிலே திவ்யமான தீர்த்தங்களை உள்ள காமன்டலத்தினைத்  தரித்தவரும்
பிரகாசிக்கக் கூடிய தண்டம் போன்ற வலிமை வாய்ந்த வலது கையை உடையவரும்
ஆன ஸ்ரீ இராமப் பிரியரான அந்த மாருதியின் பாதம் பணிந்து வணங்குகின்றேன்
கவசம்  
கீழ்த் திசையில் என்னை ஹனுமான் காப்பாற்றட்டும்

தெற்குத் திசையில் பவனாத்மாஜன் காப்பாற்றட்டும்

மேற்குத் திசையில் சமுத்திரத்தின் கரைப்பினைக் கண்டவர் காப்பாற்றட்டும்

வடக்குத் திசையில் சமுத்திரத்தின் கரைப்பிணைக் கண்டவர் காப்பாற்றட்டும்

கேசரியின் பிரிய குமாரன் மிகுந்த அன்புடன் வந்து என்னைக் காப்பாற்றட்டும்

விஷ்ணு  பக்தன் என்னைக் கீழ்ப் பாகத்தில் காப்பாற்றட்டும்

பவன குமாரன் இடது பக்கத்தில் காப்பாற்றட்டும்

இலங்கையைக் கொளுத்தி தகனம் செய்தவர் எப்போதும் என்னை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றட்டும்

சுக்ரீவனுடைய மந்திரியாக இருந்தவர் என் தலையைக் காப்பற்றட்டும்

மஹா வீரன் எப்போதும் புருவங்களின் மத்தியனைக் காப்பற்றட்டும்

நிழலை இழுக்கும் வல்லமை வாய்ந்த ராட்சசியை சம்ஹாரம் செய்தவர் என் கண்களைக்  காப்பாற்றட்டும்

பிலவகேச்வரன்  என்  கன்னங்களைக் காப்பாற்றட்டும்

ஸ்ரீ ராம கிங்கரன் காத்து மூலத்தினைக் காப்பாற்றட்டும்

அஞ்சனையின் குமாரன் மூக்கினைக் காப்பாற்றவேண்டும்

ஹரீச்வரன் முகத்தினைக் காப்பாற்றவேண்டும்

ருத்ரப்ரியன் வாக்கினைக் காப்பாற்றவேண்டும்

பிங்கல வர்ணமுள்ள கணங்களை உடையவர நாக்கினைக் காப்பாற்றவேண்டும்

அர்ஜுனனுக்கு இஷ்டமாய் இருந்தவர் தாவாக்கட்டையினைக் காப்பாற்றவேண்டும்

அசூரர்களின்  கொழுப்பினைப் போக்கி அவர்களைக் கொன்றவர் கழுத்தினைக் காப்பாற்றவேண்டும்

தேவர்களால் பூஜிக்கப்படுகின்றவர் தோள்களைக் காப்பாற்றவேண்டும்

மஹா தேஜஸ்சை உடையவர் புஜங்களை காப்பாற்றவேண்டும்

பாதங்களை ஆயுதமாக உபயோகிக்கும் வல்லமை பெற்றவர் முன் கைகளைக் காப்பாற்றவேண்டும்

நகங்களை ஆயுதங்களாக உடையவர் நகங்களை காப்பாற்றவேண்டும்

பீன்சுவரகர் வயிற்றினைக்  காப்பாற்றவேண்டும்

முத்திரையை அடைந்தவர் மார்பினைக் காப்பாற்றவேண்டும்

புஜங்களை ஆயுதமாக உடையவர் பக்கங்களைக்  காப்பாற்றவேண்டும்

இலங்கா பஞ்ஜனன்  பின்பக்கத்தைக்  காப்பாற்றவேண்டும்

இராம தூதன் நாபியினைக் காப்பாற்றவேண்டும்

அணிலாத்மாஜன் இடையைக் காப்பாற்றவேண்டும்

மஹாப்ரபஞ்சன் குஹ்ய ஸ்தானத்தைக் ஸ்தானத்தைக்  காப்பாற்றவேண்டும்

சிவப் பிரியன் லிங்கத்தினைக் காப்பாற்றவேண்டும்

இலங்கையில் உள்ள இராவணனின் மாளிகையை ஹதம் செய்தவர் தொடைகளைக் காப்பாற்றவேண்டும்

அத்துடன் முழங்கால்களையும் காப்பாற்றவேண்டும்

கபி சிரேஷ்டன் கணைக் கால்களைக் காப்பாற்றவேண்டும்

மஹா பலன் பின்னங்கால்களைக் காப்பாற்றவேண்டும்

ஓஷதி மலையை வேருடன் பெயர்த்து எடுத்துவர் பாதங்களைக்  காப்பாற்றவேண்டும்

சூரியனுக்கு இணையானவர்  அங்கங்கலைக் காப்பாற்றவேண்டும்

அளவில்லாத ஆற்றலை உடையவர் பாதத்தின் விரல்களைக் காப்பாற்றவேண்டும்

மஹாசூரன் உடம்பில் உள்ள எல்லா அங்கங்களையும் காப்பாற்றவேண்டும்

ஆத்ம ஸ்வருபம் அறிந்தவர் என் மயிர்கால்கள் அனைத்தையும் காப்பாற்றவேண்டும்

கவசத்தைப்  படிப்பதினால் உண்டாகும் நற்ப்பலங்கள் 

எதிரிகளை வெல்ல.. 

இந்தக் கவசத்தைத் தினந்தோறும் மூன்று  தடவை என்ற கணக்கில் 

தொடர்ந்து மூன்று மாதக் காலம் வரை ஜபித்துக் கொண்டே இருந்தால் 

எதிரிகளை வெல்லுவான் நிலுவையில் இருக்கக் கூடிய நீதிமன்ற வழக்குகள் வெல்லும் 

வாதப் போரில் கலந்து கொண்டாலும் ,பட்டி மன்றங்களில் கலந்து கொண்டாலும் 

இவர்கள் தங்கள் எதிர் அணியினைத் தோர்க்கடிப்பார்கள்.

தரித்திரம் அகல ...
ஒருவன் அளவற்ற தரித்திரத்தில் இருக்கும் காலத்தில் இதை படித்து வந்தால் 
அவன் தரித்திரம் நீங்கிச் செல்வத்தை அடைவான் .வெகு விரைவில் பணம் படைத்தவனாகவும் மாறுவான் .

கொடிய வியாதிகள்  தீர்வதற்கு ...


இந்தக் கவசத்தை இரவு பதினைந்து நாழிகைக்கு மேல் 

ஓடக் கூடிய நீர் நிலையில் நின்று விடாமல் ஏழு தடவை தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் 

சஷயம்  எனப்படும் எலும்புருக்கி நோய்
அபஸ்மாரம் என்னும் வியாதி ,குஷ்ட ரோகம்   ஆகியவையும் ஒழியும்

பொன்னும்,பொருளும் பெற்றும் பெரும் புகழை அடைய 

இந்தக் கவசத்தை ஒவ்வொரு ஞாயற்றுகிழமையன்றும்  அரச மரம் ஒன்றிற்கு அடியில் அமர்ந்து பாராயணம் செய்து வந்தால்

அவன் அளவற்ற பொன்னையும் ,பொருளையும் பெறுவான் ,பெரும் புகழையும் அடைவான்

யுத்தத்தில் வெல்ல 


முன் சொன்னபடியே அரச மரத்தடியில் அமர்ந்து ஞாயிற்றுக் கிழமையில் பாராயணம் செய்துவிட்டு யுத்த காலத்திற்குச் சென்றால் அவன் அந்த யுத்தத்தில் வெற்றி அடைவான் 

சிறையிலிருந்து விடுதலை கிடைக்க 
சிறையில் இருப்பவனை விடுவிக்க வேண்டுமென்றால் ,வேதம் அறிந்த நல்லறிவு கொண்ட ,நல்ல குணம் படைத்த பிராமணர்களை அழைத்து வந்து இந்தக் கவசத்தைப் பாராயணம் செய்ய  வைத்தால் 

சிறையில் இருப்பவன் அதிலிருந்து விடுதலை அடைவான்

ஹனுமார்  என்று புகழப்படும் ஸ்ரீ மாருதியை உபாசிப்பதால்  உண்டாகும் பலன் 
ஹனுமாராகிய மாருதியை ஒருவன் தொடர்ந்து உபாசித்து வந்தால் அவனுடைய புத்தியிலே தெளிவு உண்டாகும் 

உடலில் அளவற்ற பலம் உண்டாகும் 

மாருதி என்ற பெயரைச் சொன்னாலே பெரும் புகழ் உண்டாகும் 

மனதில் எல்லை இல்லாத தைரியம் உண்டாகும்

எதைக் கண்டும் யாரைக் கண்டும் எதற்கும் அஞ்சாத துணிவு பிறக்கும்

எவ்வகைப்பட்ட வியாதியாக இருந்தாலும் நிவாரணம் உண்டாகும்

எப்போதும் எவராலும் எச்சந்தர்ப்பத்திலும் எந்தவிதத் தொந்தரவும் ஏற்ப்படாது

பேச்சில் சாமார்த்தியம் வந்து குடியேறும்

ஸ்ரீ  மாருதி நமஸ்காரம் 

சத்ருக்களைக் கொன்று ஒழிப்பவரும்

நிகரற்ற இச்வர்யங்களை வணங்கியவுட னே கொடுக்கக் கூடியவரும்

எவ்வித சோகத்தினையும் போக்க கூடிய சக்தியினை உடையவரும்

யுத்தத்தில பயன்கரமானவருமான  ஸ்ரீ ஹனுமார் எனப்படும் மாருதியை நமஸ்காரம் செய்கிறேன்

ஸ்ரீ மாருதி காயத்ரீ 

தத் புருஷாய வித்மஹெ
வாயு புத்ராய தீ மஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத !!

ஸ்ரீ மாருதியின் கருப்பை உண்டாக

ஸர்வ கல்யாண த்திரம்
ஸர்வ  ஆபத் கமாருதம்
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்ஜநேயம் நாமம் யஹம் !

                         எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெற 


ஸ்ரீ ராம தூத மஹா தீர
ருத்ர வீர்ய ஸமுத்பவ
அஞ்சநா  கர்ப்ப சம்பூத
வாயுபுத்ரா நமோஸ்துதே !
அஸாதயம் தவ கிம் வத
ராம தூத க்ருபாசிந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ

ஸ்ரீ மாருதி த்யாந ஸ்லோகங்கள்

அஞ்சனா நந்தனம் வீரம் ,
ஜானகீ சோக நாசனம்
கபிச ம--ஷீ ஹந்தாரம்
வந்தே லங்கா பயங்கரம்

உல்லங்ய ஸிந்தோ ஸலிலம்
ஸலீயம்  ச  சோக
வஹ்நிம் ஜனாகத்ம  ஜாயா
ஆதாய தேவைவ

ததாஹ லங்காம் நமாமிதம்
பிராஞ்சலி  ராஞ்சநேயம்
மனோ ஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானர யூத முக்யம்
ஸ்ரீ ராம தூதம் சரணம் ப்ரபத்யோ !!

ஆஞ்சநேய மதி பாடலானனம்
காஞ்சனாத்ரி  கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம்
 -- வயாமி  பவமான நந்தனம்

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருத மஸ்த  காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசநம்
மாருதம் நமத ராக்ஷ்ஸாந்தகம்

கோஷ்பதீ க்ரூத  வாராஸிம்
மஸ்கீத்ருத ராக்ஷஸம்
ராமாயண  மஹாமாலா
ரத்நம் வந்தே நிலாதமஜம்

ஸர்வாரிஷ்ட  நிவாகரம்
சுபகரம் பிங்காக்ஷமக்ஷா ஹம்
ஸீதான்  வேஷ்ண  தத்பரம்
கபிவரம் கோடீந்து  ஸூ ர்யப்ரபும்
லங்காத்வீப பயகரம் ஸஹலதம்
ஸூ க்ரீவ ஸம்மாநிதம்
தேவேந்த்ராதி ஸமஸ்த
தேவ வினுதம்  காகுஸ்த தூதம் பஜே !

புத்திர் பலம் யரோ  தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்ச
ஹனூமத்  சஸ்மரணா  பவேத

ஸ்ரீ மாருதி மூல மந்த்ரம் 

ஓம் .ஆம் ,ஊம்,ஐயும்,கிலியும்,சவ்வும் ,வவ்வும் ,சிங் ,வங் நமசிவய ,வசியநம ,அநிமந்த வசிய ஸ்வாஹா

மாருதி துதிகள் 

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறாக  ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்


வாழ் விசைத் தெடுத்து வன்றாண்  மடக்கி மார்பொடிக்கி  மானத்

தோள் விசைத்  துணைகள் பொங்கக் கழுத்தினைச்  சுருக்கித் தூண்டும்

கால் விசைத்  தடக்கை நீட்டிக்  கட்டிளங் கதுளா வண்ணம்

மேல் விசைத் தெழுந்தா னுச்சி விரிஞ்சனாடுரிஞ்ச  வீரன்



மீட்டு முறை வேண்டுவன வில்லையென மெய்ப்போர்

தீட்டியது தீட்டரிய செய்கையது செவ்வே

நீட்டியதென  நேர்ந்தன னெனா  நெடிய கையால்

காட்டினா   நொராழியது  வாணுதலி கண்டால்


சுட்டின னின்றான்  றொழுத கையினன்

விட்டுயர் தோளினன் மேக்குயர்

எட்டரூ  நெடுமுக டெய்தி நீளுமேல்

முட்டுமென்  றுருவொடும்   வளைந்த மூர்த்தியான்


நல்லன நிமித்தம் பெற்றோம்  நம்பியைப் பெற்றோம் நம்பால்

இல்லையே துன்பம் ஆனது இன்பமும் எய்திற்று இன்னும்

வில்லினாய் இவனைப் போலாம்  கவிக் குலக் குரிசில் வீரன்

சொல்லினால் ஏவல்  செய்வான் அவன் நிலை சொல்லற்  பாற்றோ ?


எவ்விடத்தும் இராமன் சரிதையாம் அவ்விடத்திலும் அஞ்சலி அத்தனாய்
பல்வ மிக்க புகழ்த்  திருப்பார்க்கடல்  தெய்வ தாசனைச் சிந்தை செய்வாமரோ
அஞ்சனை மைந்தோ போற்றி அஞ்சினை வென்றாய் போற்றி
வேஞ்சினைக் கதிர்ப்பின் சென்று பிழுமறை  யுனர்ந்தாய்  போற்றி
மஞ்சன மேனி ராமன் மலர்ப்பாதம் மறவாய்  போற்றி
எஞ்சிளில் ஊழிஎல்லாம் இன்றெனவிருப்பாய்  போற்றி

சுந்தரவல்லி ஏவ  சூழ்கடல் இலங்கை மேவி
அந்தமில் வீடு நல்கும்  ஆயிழை தன்னைக் கண்டு
வந்தவேல் வரக்கர் சிந்தி வளிஎரி மடுத்து மீண்ட
நந்தலில் லாத தூதன் நம்மையும் அளித்துக்  காப்பான்

ஸ்ரீ மாருதி குறித்த தமிழ் கீர்த்தனைகள் 

ஹனுமானே நீயே கனவானே
ஹனுமானே நீயே கனவானே
தனதாய் எங்கட்கு பிராணதாரை நீ
வார்த்தாயே
ஹனுமானே நீயே கனவானே

நமது துணைவரும் வாணர்களும் தாமே
நிமிஷத்துன்னால்  உயிர் நிலை பிடித்தோமே
சுமதலை உனக்கென்று சொன்னோம் துணிந்தோம்
ஒன்றும் அசைவில்லாமல் உடம்ம்பையும் மறந்தோம்
கொன்ற உயிர்களை நீ கொடுக்கவே சிறந்தோம்
அன்று தசரதன் பெற்ற ஆருயிர் துறந்தோம்
இன்றுனது வயிற்றில் இருவரும் பிறந்தோம்
விழிபோலும் என்தம்பி மெஇஉயிர் போயே
முழுகதபடி காத்தாய்  முழுதும் காப்பாயே
பழிகாரன் முன் இந்தப் பயம் தீர்த்தாயே
அழியாத சிரஞ்ச்ஜீவியாய்  இருப்பாயே

வா வா  ஹனுமானே !



வா வா ஹனுமானே என்னுடன் உன்ன வா வா சீமானே    (வா)
ஜீவ பயம் இல்லாமல் பரதனையும் தேற
தேற்றி எனக்கு வந்து சொன்ன உன் இளைபாற்றி
அங்கே பிரும்மாஸ்திர்த்தால் விழுந்த தம்பி பிழைக்க
அமிர்த மருந்து தேடிக் கொடுத்தாயே
இங்கே அக்கினியில் வீழ்ந்த தம்பி பிழைக்க என் வரவைச் சொல்லித் தூக்கி எடுத்தாயே
சங்கட வேதனைகள் ஏதேது  வந்தாலும் தலையிட்டுக் கொண்டு தீர்க்கத்  தொடுத்தாயே
பொங்கும் இரும்புக் கோட்டையும் கற்கதவுமே  போல எங்களைக் காக்க வாலாயம் அடுத்தாயே                                                                         (வா)

பூட்டிய தூது நீ போய்  அரக்கரக் கொன்ற ரத்தம்
போச்சிலையே இன்னம் இலங்கையில் ஈரம்
வாட்டமில்லாமல் சீதை தனையும் தந்தாய்  நல்ல
வாழ்வும் தந்தாய் எனக் குபகாரம்
கூட்டத்தினால் என்ன படையிலும் ஒருத்தன்
கொடையிலும்  ஒருத்தன் உன்னதே வீரம்
தாஷ்டீ கத் தம்பி மார்க்கும் தாய்மாற்கும்  எனைப் பெற்றோம்
தனக்கும் உனக்கும் நான் சொல்வதேன்  உபசாரம்                 (வா)

சூக்ரீவனுக்கும் விபிஷனுக்கும் தங்கள்
துரைத்தன மேல் ஆசை எந்தாயே
எக்காலமும் உந்தன் ஆசை என் காரியத்தில்
எங்கெங்கும் போய்ச் சுற்றி  நோன்தாயே
விக்கிரமம் நீ செய்து வருகையாலே நாங்கள்
விருந்த்தமுதிலியிருந்துன்னத்  தந்தாயே
சர்க்கரைப் பந்தலிலே தேன்மாதிரி  பொழிந்தாற்போல்
சந்தோஷ வார்த்தை கொண்ண்டு சமயத்தில் வந்தாயே  (வா )
































No comments:

Post a Comment